அமெரிக்காவில் இடம்பெற்ற உணவுத் திருவிழாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதோடு குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
சீயட்டில் சென்டர் வளாகத்தில் உணவுத் திருவிழா நேற்று இடம்பெற்றது. இதன்போதே துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததை சியட்டில் தீயணைப்பு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்த வேளையில், திடீரென 7 முதல் 8 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தில், இரண்டு வயதுக் குழந்தை, 23 வயது இளைஞன் ஒருவர், பெண்கள் மூவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாகசர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!
ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!