தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக,இலங்கையிலுள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் உயர்வடைந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஆபத்தான நிலையிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் வசந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் மொத்த நீர்த்தேக்க கொள்ளளவில் சுமார் 65 சதவீதம் நிரம்பியுள்ளது.
இதில் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 12 நீர்த்தேக்கங்களும்,6 நடுத்தர நீர்த்தேக்கங்களும் ஏற்கனவே வான்பாய்ந்து வருகின்றன.
இது
தற்போதைய நிலையில் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் பெரிய அளவில் வெள்ள அபாயம் இதுவரை ஏற்படவில்லை.
இருப்பினும், எதிர்வரும் நாட்களில் மழை அதிகரித்தால் நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்கப்படலாம்.
குறுகிய நேரத்தில் பெய்யும் கடும் மழை காரணமாக, ஆறுகள் இல்லாத தாழ்நிலப் பகுதிகளில் கூட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் வசந்த சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்று அழைப்பாணை!
சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியோடு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் அணி வெற்றி!
இலங்கையில் முதலீடு செய்ய தமிழக முதலீட்டாளர்கள் முன்வருகை!