கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடல்
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (10) இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம் குறித்தும், பொருளாதார சமூக விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அவுஸ்திரேலிய அரசாங்க உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version