குவைத்திலுள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் புராட்சிகர கவல் படை உரிமை கோரல்!

குவைத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாமே தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை உரிமை கோரியுள்ளது.

இதன்படி அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான ஏவுகணை பாதுகாப்பு ரேடார், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஹிமார்ஸ் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதனால் குறிப்பிட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏவுகணை பாதுகாப்பு ரேடார், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுதளங்கள் உள்ளிட்டவை இலக்காக தாக்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியுள்ளது.

மேலும் ,முன்னதாகபொதுமக்களை குறிவைத்து உயிரிழப்புகளை ஏற்படுத்திய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Exit mobile version