கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


இந்த அனர்த்தத்தில் 570க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு, 1,500க்கும் மேற்பட்ட வீடுகளும்,பிராந்திய விமான நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
கொலம்பியாவின் சோகோ மாகாணத்தில், அந்நாட்டு நேரப்படி நேற்று (10)காலை 7.34 மணியளவில் 7.4 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
மேற்கு கொலம்பியா முழுவதும் பல நூறு கிலோமீற்றர் தொலைவுக்கு நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன.
பெரெய்ரா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு வேலே டெல் கௌகா பிராந்தியமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!