சுவிட்சர்லாந்து ‘சூரிச்’ சிவன் ஆலயத்தால் ஈழத்து புகழ்பூத்த இளம் சொற்பொழிவாளர் தமிழகரன் சனாவின் ஆன்மிக செற்பொழிவு நேற்று(26) இடம்பெற்றது.
சூரிச் சிவன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற பிரதோஷ விரத வழிபாட்டைத் தொடர்ந்து, ஈழத்திலிருந்து வருகை தந்த இளம் சொற்பொழிவாளர் தமிழகரன் சனாவின் ஆன்மிக சொற்பொழிவு இடம்பெற்றது.



சொற்பொழிவைத் தொடர்ந்து, தமிழகரன் சனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்ற ஆன்மிக உணர்வோடு,
சூரிச் சிவன் ஆலயத்தின் பிரதம குரு ஸ்ரீ கைலாசநாதர் குருக்கள் மற்றும் ஏனைய குருமார்களான முரளி குருக்கள், ரவீந்திர குருக்கள்,


சைவத்தமிழ் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சின்னராஜா இராதாகிருஷ்ணன், சைவத்தமிழ் சங்கத் தொண்டர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் இணைந்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!
ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!