யாழ்.வடமராட்சி துன்னாலை காட்டுப்பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதோடு சந்தேக நபரொருவரை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடிப் பொலிஸார் இன்று (18) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கசிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது இந்த
50 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு,
78 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும்
கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏனைய சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு வருகிறது வழி!
பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!
பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!