யாழ்.வடமராட்சி துன்னாலை காட்டுப்பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டதோடு சந்தேக நபரொருவரை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடிப் பொலிஸார் இன்று (18) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கசிப்பு நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது இந்த
50 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு,
78 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும்
கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏனைய சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!