அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் நியூயோர் நீதிமன்றத்தில் நேற்று(05) ஆஜர்படுத்தப்பட்டனர்.
போதைப்பொருள் பயங்கரவாத சதி, கோகெயின் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கி சதி,
அழிவு கரமான சாதனம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவர் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், நேற்றைய தினம் நியூயோர்க் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
40 நிமிடம் இடம்பெற்ற குற்றவியல் விசாரணையின் போது நிக்கலோஸ் மதுரோவும் அவரது மனைவி சிரியா ஃப்ளோரசிடமும் தம்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர்.
நான் நிரபராதி, நான் ஒரு கண்ணியமான மனிதனென்று மதுரா இதன்போது கூறியுள்ளார்.
இதனையடுத்து வழக்கு விசாரணை மார்ச் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!