மத்திய கிழக்கு பிராந்திய போர்ச் சூழல் நெருக்கடிகள் குறையும் வரை, தற்போதைய எரிபொருள் மானிய நடைமுறையை நிறுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தில் ஏற்படும் நட்டத்தை அரசாங்கத்தால் காலவரையறையின்றி பொறுப்பேற்க முடியாது என அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜனாதிபதி கூறியது மானியத்தைக் காலவரையறையின்றி தொடர முடியாது என்பதே தவிர,தற்போதைய நெருக்கடி நிலை தணிந்த பின்னரே இந்த மானியம் நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போதைய மானிய ஏற்பாட்டின் கீழ் அரசாங்கம், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாயையும் மானியமாக வழங்கி வருகின்றது.

சட்டவிரோத மணலுடன் நிறுத்தாது சென்ற டிப்பர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது: இரு டிப்பர்கள் கைப்பற்றல்!
13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!