வடகொரியா தனது வரலாற்றிலேயே மிகப்பாரிய அளவிலான புதிய போர்க்கப்பல் ஒன்றை அதிகார பூர்வமாகத் தனது கடற்படையில் இணைத்துள்ளது.
‘சோ ஹியோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 5,000 டன் எடையுள்ள அதிநவீன மல்டிபர்பஸ் போர்க்கப்பல், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது என்று அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார்.

நமது கடற்படையை அணு ஆயுதங்களால் பலப்படுத்தும் திட்டம் திட்டமிட்டபடி தடையின்றி நகர்வதைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக இப்போர்க்கப்பல் திகழ்கிறது என கிம் ஜோங் உன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய போர்க்கப்பலானது, வான் பாதுகாப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களுடன், தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவக்கூடிய ஏவுகணைகளையும் உள்ளடக்கியுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
ஈரான் தாக்கினால் நிபந்தனையற்ற பதிலடி உறுதி: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!
ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதலை ஆறாவது நாளாகவும் தெடரும் அமெரிக்கா!