22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழு நேற்று (10) கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த இரண்டு சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன.

Exit mobile version