இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் ஸிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்படுத்தாடிய ஸிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்றது.
ஸிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பெற்றார். அதில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்களும் அடங்கும்.

இதனையடுத்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவஸ்திரேலிய அணி, 19.3 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்மூலம் ஸிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஸிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மண்சரிவு மஞ்சள் எச்சரிக்கை நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு விடுப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர்!
சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: ஹேமரத்ன தேரருக்கு DNA பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு!
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி அறிவிப்பு!