குஜராத் டைட்டன்ஸ்
அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக், 34 ஆவது போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேற்று இரவு (24) நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றுபெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.


அதற்கமைய முதலில் துடுப்படுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக, சாய் சயந்தன் 58 பந்துகளில் 100 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்றார்.


பதிலுக்கு துடுப்படுத்தாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது.



பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பாக, விராட் கோலி 44 பந்துகளில் 100 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்றார்.
இந்த போட்டியில் ஆட்ட நாயகராக விராத் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!