யோஷித ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று(16) முன்னிலையாக அழைக்கப்பட்டிருந்த போதிலும், தம்மால் இன்று ஆஜராக முடியாது என சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளார்.
அவரது முன்னிலையின்மை தொடர்பாக ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, பிரித்தானிய கடற்படையால் பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட பயிற்சி முகாமில் கலந்து கொண்டமை தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் தன்னால் இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முடியாதென சட்டத்தரணி ஊடாக அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்வதைத் தடுக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய மனுத்தாக்கல்!
கைப்பற்றிய இடங்களிலிருந்து பின்வாங்க மாட்டோம்:இஸ்ரேல் தெரிவிப்பு!
செம்மணியில் பச்சிளம் குழந்தை, சிறார்கள் உட்பட மேலும் 10 பேரினது என்புக்கூடுகள் மீட்பு!
வித்யா படுகொலை வழக்கு தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது யாழ்.மேல் நீதிமன்றம்!