கடுகஸ்தோட்டையில் பாடசாலை வாகனம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்!

கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியில் கட்டுகஸ்தோட்டை கலுகல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றுச் சென்ற வாகனம் பிறிதொரு பேருந்துடன் மோதுண்டதில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவர்களும், பேருந்து சாரதியமே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கடுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Exit mobile version