கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
கிளிநொச்சி தர்மபுரம் புன்னைநீராவி பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த விபத்து நேற்று(09) இடம்பெற்றுள்ளது.


கடைச்சல் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இளைஞனை மின்சாரம் தாக்கியுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுடர் ஒளி முன்பள்ளிச் சிறார்களின் வேடம் தாங்கல் நிகழ்வு!
ஐந்து மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!