கிளிநொச்சி – முரசுமோட்டை -நான்காம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(12) பிற்பகல் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விஸ்வமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும், வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்போது காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்று அழைப்பாணை!
சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியோடு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் அணி வெற்றி!
இலங்கையில் முதலீடு செய்ய தமிழக முதலீட்டாளர்கள் முன்வருகை!