க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தமிழ் மற்றும் கணித பாடங்களுக்கான விசேட செயலமர்வு சிகரம் நிறுவனத்தின் அனுசரணையோடு செம்பியன்பற்று தெற்கு, வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.


இந்தச் செயலமர்வில் கணித பாட விரிவுரையாளராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மென்பொருளியலாளர் பட்டதாரியான வினித், தமிழ்ப்பாட வளவாளராக சிகரம் கல்வி நிறுவனத்தின் இணைப்பாளரும் தமிழ் ஆசிரியருமான கு.உதயபாஸ்கரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்தச் செயலமர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் க.பொ.த. சாதாரணபரீட்சை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!