சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இன்று(10) இடம்பெற்றுள்ளது.
குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீதசனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமை காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் பிணைக் கோரிக்கையை விடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, அமைச்சர் சந்திரசேகரருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் உரையாடல் இடம்பெற்றது.
அதன்போது ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளதோடு, சங்கீத்சனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடியிருந்தார்.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்று அழைப்பாணை!
வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் அணி வெற்றி!
இலங்கையில் முதலீடு செய்ய தமிழக முதலீட்டாளர்கள் முன்வருகை!
க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் வெளிவரும்: கல்வி அமைச்சு அறிவிப்பு!