நாடு தழுவிய ரீதியில் சட்டத்தரணிகள் இன்று(16) நீதிமன்ற நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்துள்ளனர்.
தலங்கம, அக்குரேகொட பகுதியில்
சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் நேற்று முன்தினம்(14) ஆயுத்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், துப்பாக்கிதாரிகளை கைது செய்யக் கோரியும் இந்தப் பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருகிறது.



இதேவேளை, யாழ்.குடாநாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்காரணமாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாகம், பருத்தித்துறை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய நீதிமன்றங்களின் சட்டத்தரணிகளும் மன்றுக்கு வருகைதரவில்லை.

இதன் காரணமாக நீதிமன்ற வழக்குகள் சட்டத்தரணிகள் இன்றி அழைக்கப்பட்டதோடு, வழக்குகள் திகதியிடப்பட்டன.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !