கிளிநொச்சி மாவட்ட சாரணர் சங்கத்தின் தைப்பொங்கல் விழா யா/சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் நேற்று(25) சிறப்பாக இடம்பெற்றது. Click video…….
சாரணர் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட ஆணையாளர் சி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில், கிளிநொச்சி வடக்கு வலய சாரணர்கள், கிளிநொச்சி தெற்கு வலய சாரணர்கள் மற்றும் தென்மராட்சி வலய சாரணர்கள் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வில் விருந்தினர்களாக தென்மராட்சி கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் சு.ஸ்ரீகுமரன், தமிழ் இணையக் கல்விக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தருமான க.ரஜனிகாந்தன், இலங்கை வங்கியின் சாவகச்சேரி கிளை முகாமையாளர் த. கபிலன், சாவகச்சேரி டிறிபோர்க் கல்லூரி அதிபர் ஐ.தேவஈஸ்வரன், சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன், ஓய்வு நிலை அதிபர்களான செ.பேரின்பநாதன், அ.கைலாயபிள்ளை ஆகியோரும்,
பிரெஞ்சு மொழி விரிவுரையாளரும், பாரதி இன்ஸ்ரிரியூட் இயக்குநருமான திருமதி துஷ்யந்தி ரஜனிகாந்தன், சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான மு.கோகுலராஜ், தி.சசிகரன் ஆகியோரும் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில், உறியடித்தல், கயிறு இழுத்தல், கொம்பு வைத்தல், சமநிலை ஓட்டம், சங்கீதக்கதிரை ஆகிய விளையாட்டுக்களும், பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!