முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி முல்லைத்தீவு வைத்தியசாலை முன்பாக இன்று( 29) போராட்டம் இடம்பெற்றது.
குகநேசன் டினோஜா என்கின்ற 12 வயதுடைய சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.வபின்னர் கடந்த 21ஆம் திகதி அவர் உயிரிழந்திருந்தார்.


மருத்துவத் தவறு காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என சிறுமியின் உறவினர் குற்றஞ் சாட்டிவருகின்றனர்.


இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டதோடு மேலதிக விசாரணையும் இடம் பெற்றுவருகிறது.
இந்நிலையில் சிறுமியின் மரணத்துக்கு நீதிகோரி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று போராட்டம் இடம்பெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
செம்மணி மனித புதை குழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!