யாழ். தென்மராட்சி மீசாலை வடக்கு, “சுடர் ஒளி” முன்பள்ளிச் சிறார்களின் “வேடம் தாங்கல்” நிகழ்வு முன்பள்ளி வளாகத்தில் நேற்று (27) இடம்பெற்றது.
சுடர் ஒளி முன்பள்ளி தலைமை ஆசிரியர் சிவதாசன் மிதுலா தலைமையில் இடம்பெற்ற வேடம் தாங்கல் நிகழ்வில், முன்பள்ளிச் சிறார்கள் பல்வேறு வேடங்களை தரித்து சபையோரை மகிழ்வித்தனர்.



இந்த நிகழ்வில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் க.ரஜனிகாந்தன், தமிழ் இணைய கல்விக்கழக வடக்கு மாகாண இணை இணைப்பாளர் ஆர்.துஷ்யந்தி, சமூகசேவையாளர் திருமதி சிவநாதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.



அதனைத் தொடர்ந்து வேடம் தாங்கல் நிகழ்வில் பங்கேற்ற முன்பள்ளிச் சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.




ஐந்து மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!
அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!