இலங்கை
Trending

சுடர் ஒளி முன்பள்ளிச் சிறார்களின் வேடம் தாங்கல் நிகழ்வு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

யாழ். தென்மராட்சி மீசாலை வடக்கு, “சுடர் ஒளி” முன்பள்ளிச் சிறார்களின் “வேடம் தாங்கல்” நிகழ்வு முன்பள்ளி வளாகத்தில் நேற்று (27) இடம்பெற்றது.

சுடர் ஒளி முன்பள்ளி தலைமை ஆசிரியர் சிவதாசன் மிதுலா தலைமையில் இடம்பெற்ற வேடம் தாங்கல் நிகழ்வில், முன்பள்ளிச் சிறார்கள் பல்வேறு வேடங்களை தரித்து சபையோரை மகிழ்வித்தனர்.

இந்த நிகழ்வில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் க.ரஜனிகாந்தன், தமிழ் இணைய கல்விக்கழக வடக்கு மாகாண இணை இணைப்பாளர் ஆர்.துஷ்யந்தி, சமூகசேவையாளர் திருமதி சிவநாதன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து வேடம் தாங்கல் நிகழ்வில் பங்கேற்ற முன்பள்ளிச் சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button