
FIFA உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்த போட்டி அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டி ஸ்டேடியத்தில் நேற்று (12) நடைபெற்றது.
போட்டியில், அர்ஜென்டினா சிறப்பான விளையாட்டின் மூலம் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம், அர்ஜென்டினா அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப்போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அற்லாண்டா ஸ்ரேடியத்தில் இடம்பெறவுள்ளது.
மேலும், மற்றைய அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன. இந்தப்போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை டல்லாஸ் ஸ்ரேடியத்தில் இடம்பெறவுள்ளது.
Follow Us





