திருகோணமலை , ஈச்சிலம்பற்று, சல்லி கடற்கரையில் டொல்பினொன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த டொல்பின் இன்று(06) காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம் கொண்ட சிறிய டொல்பின் என தெரியவருகிறது.
மேலும், மற்றுமொரு டொல்பின் அதே இடத்தில் உயிருடன் கரையொதுங்கி பின்னர் கடற்றொழிலாளர்களால் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த இடத்திற்கு சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து இறந்த நிலையில் காணப்பட்ட டொல்பினை அப்புறப்படுத்தியுள்ளனர்.

வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!