நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி தலைமையிலான தேரர்கள், தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதிக்கு இன்று(02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடினர்.


சட்டவிரோதமாக தனியார் காணிகளில் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாரதிபதியை அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.


இதனொரு கட்டமாக தையிட்டிக்கு இன்று நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாரதிபதி காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடியதோடு திஸ்ஸ விகாரைக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காணியை பார்வையிட்டுச் சென்றார்.

சுடர் ஒளி முன்பள்ளிச் சிறார்களின் வேடம் தாங்கல் நிகழ்வு!
ஐந்து மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!