புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த திணைக்கள இணையத்தளத்தின் புகையிரத நேர அட்டவணை தொடர்பான விபரங்களை அறியும் பகுதி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இணையத்தளத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version