இலங்கை மின்சார சபைத் தொழிற் சங்கங்கள், நாடு தழுவிய ரீதியில்,6 மணித்தியால அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
மின்சார சபை தொழிற்சங்கங்கள், 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 ஆம் திகதி வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன.
குறித்த பேச்சு வார்த்தை தீர்மானம் எவையும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
இந்த நிலையில், மின்சார சபை தொழிற் சங்கங்கள் இன்று நண்பகல் 12.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை 6 மணித்தியால அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் போராட்டத்தின் போது தீர்வு கிடைக்காதவிடத்து நாளை முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!
இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!
யானை தாக்கிப் பெண் பலி: இருவர் காயம்!
கச்சதீவு பெருந்திருவிழா,செல்லக் குவியும் பக்தர்கள்!