இலங்கை மின்சார சபைத் தொழிற் சங்கங்கள், நாடு தழுவிய ரீதியில்,6 மணித்தியால அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
மின்சார சபை தொழிற்சங்கங்கள், 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 ஆம் திகதி வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன.
குறித்த பேச்சு வார்த்தை தீர்மானம் எவையும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
இந்த நிலையில், மின்சார சபை தொழிற் சங்கங்கள் இன்று நண்பகல் 12.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை 6 மணித்தியால அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் போராட்டத்தின் போது தீர்வு கிடைக்காதவிடத்து நாளை முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
செம்மணி மனித புதை குழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!