யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களின் ஏற்பாட்டில், வெசாக் பண்டிகை நிகழ்வும்,வெசாக் கூடாரக் காட்சியும், யாழ். தலைமை பொலிஸ் நிலைய மைதானத்தில் நேற்றிரவு (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்த்தன, யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன,யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா, யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.ஈ.என்.தில்ருக், யாழ்.தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். பாலித செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


மேலும்,வெசாக் கூடாரங்களை இன்றும் பொதுமக்கள் பார்வையிட முடியும் என யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். பாலித செனவிரட்ன தெரிவித்தார்.



யாழில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!