யாழ்.புத்தூர் வாகன விபத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று(05) இடம்பெற்றுள்ளது.

தென்மராட்சி, மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனத்தோடு முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர்கள் மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில், புத்தூர் கிழக்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (06) காலை உயிரிழந்துள்ளார்.

Exit mobile version