FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!

FIFA உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் ஸ்பெய்ன் அணி வெற்றிபெற்று, இரண்டாவது தடவையாகவும் சம்பியானகியுள்ளது.

உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் இன்று(20) நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமானது.

இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்ரீனா மற்றும் ஸ்பெய்ன் அணிகள் மோதின.

இதில் போட்டி நேரம் முடிந்தபோது இரு அணிகளும் கோல் எதையும் போடாமல் சமநிலையில் இருந்தன.

இதனால் மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், ஸ்பெய்ன் அணி கோல் ஒன்றைப் போட்டு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.

ஸ்பெய்ன் அணி ஏற்கனவே 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியிலும் சம்பியானாகியிருந்தது.

இது ஸ்பெய்ன் அணிக்கு இரண்டாவது சம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version