அண்ணாமலையைத் தொடர்ந்து லதா ரஜனிகாந் ஆரம்பித்த ‘மக்கள்மேடை’ இயக்கம்!

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என்றும், ஒன்றாக இணைந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களைச் செய்வோம் என்றும், லதா ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை,
நேற்று (05) நண்பகலில் ‘இது நம்ம இயக்கம்’ என்ற இயக்கத்தை தொடங்கிய நிலையில், லதா ரஜனிகாந்தின் இந்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

இந்த நிலையில், அண்ணாமலை ஆரம்பித்த புதிய இயக்கத்தில் இதுவரை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.

Exit mobile version