அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த ஈரானின் முக்கிய கட்டமைப்பு!

ஈரானின் தெற்குப் பகுதியில் அமெரிக்க இராணுவம் நடாத்திய வான்வழித் தாக்குதல்களில் இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்கள் சேதமடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெற்கு ஈரானிய நகரமான சிரிக் அருகிலுள்ள பமானி மாவட்டத்தில் அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதனால் அந்தப் பகுதி முழுவதற்குமான குடிநீர் விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version