புதிய ‘மெட்ரோ’ பேருந்துகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது வரி செலுத்துவோர் மீது மேலதிக சுமையைச் சுமத்தும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
மெட்ரோ
பேருந்துகள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாகவும், அவை தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளை ஈர்க்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மெட்ரோ பேருந்துகள் வழமையான பேருந்துகளை விட அதிக டீசலை நுகர்கின்றன எனவும், இத்திட்டத்தால் ஏற்படும் இழப்புகளை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், மெட்ரோ பேருந்து சேவையின் செயல்பாடு மற்றும் நிதிசார் சாத்தியக்கூறுகள் குறித்து வெளிப்படைத்தன்மை தேவை எனவும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஐயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
செம்மணி மனித புதை குழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!