யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் யாழ்.அரியாலைப் பகுதியில் இன்று(10) முற்பகலில் இடம்பெற்றுள்ளது.
தண்டவாளத்தை குறுக்கறுத்து வீதியை கடக்க முற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில், முத்தமிழ் வீதி,யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த இளைஞர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!