இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் பிரச்சினைகளை தீர்க்க புதிய ஆணைக்குழு நியமனம்!

இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக ஆராயும் வகையில் 15 உறுப்பினர்களைக் கொண்டதாக குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தெல்கே அசோக பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் ஊடாக, அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது,

அரசுப் பணியாளர்களின் தொழில்முறையை மேம்படுத்துவது, உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப பொதுச் சேவையை கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்துவது போன்ற பரிந்துரைகள் பெறப்படவுள்ளன.

Exit mobile version