இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக ஆராயும் வகையில் 15 உறுப்பினர்களைக் கொண்டதாக குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.


தெல்கே அசோக பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் ஊடாக, அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான தற்போதைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது,
அரசுப் பணியாளர்களின் தொழில்முறையை மேம்படுத்துவது, உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப பொதுச் சேவையை கட்டமைப்பு ரீதியாக சீர்திருத்துவது போன்ற பரிந்துரைகள் பெறப்படவுள்ளன.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !