யாழ் ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள பழைய கடற் கோட்டையை நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் இன்று(02) நேரில் சென்று பார்வையிட்டார்.
ஊர்காவற்றுறை கடற் கோட்டையை புனரமைத்து அதனூடாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

போர்த்துக்கேயரால் 1629 இல் கட்டப்பட்ட ஊர்காவற்றுறை கடற் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் புனரமைக்கப்பட்டது.
கிரனைட் கற்கள் மற்றும் கடற்ஏபாறைகளால் கட்டப்பட்ட இந்தக்கோட்டை இன்று சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கோட்டையை புனரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்று அழைப்பாணை!
சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியோடு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் அணி வெற்றி!
இலங்கையில் முதலீடு செய்ய தமிழக முதலீட்டாளர்கள் முன்வருகை!