ஏறாவூர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

மட்டக்களப்பு – ஏறாவூர் குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு (29) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் தகர வேலியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணி மையத்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

Exit mobile version