இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் போதைப் பொருட்களுடன் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து தெள்ளாயிரம் பேர் (102,900)
கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 இலட்சத்துக்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எவ்.யு.வூட்லர் தெரிவித்தார்.
இதன்போது, 526 கிலோகிராம் ஹெரோயின், 1,419 கிலோ கிராம் ஐஸ், 3,548 கிலோ கிராம் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கைது செய்யப்பட்ட 2,400 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!