கொழும்பு கடவத்தையில் விபத்து :ஒருவர் பலி!

கொழும்பு – கடவத்தை பேருந்து நிலையம் அருகே இன்று (24) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடவத்தை பேருந்து நிலையத்திற்குள் பாதசாரி மீது பேருந்து மோதியுள்ளது.

இந்த விபத்தில் ராகமையை சேர்ந்த 49 வயதுடைய காயமடைந்த நபர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version