யாழில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் டடிப்பர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
குறித்த மணலானது கொடிகாமம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் பகுதிகளை தாண்டி வந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த மணல் கிளாலி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றிவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தபொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!