சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ் நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.


ஈழத்தின் தென்மராட்சி பதியில் புகழ் பூத்த ஆலயங்களில் ஒன்றான சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலயம் திகழ்கிறது.


ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீரால் சிவலிங்க பெருமானை நீராட்டி 108 லிங்கமாக வீற்றிருக்கும், சிவபெருமானிடம் தங்களின் நேத்தி கடன்களை நிறைவு செய்து வருகின்றனர்.


ஆலயத்தில் 108 சிவலிங்க மூர்த்திகள் நந்தியம் பெருமானோடு காட்சியளிக்கின்றனர்.
வாசலிலே கருங்கல் தேரிலே சிவலிங்கப் பெருமானும், மாணிக்கவாசகப் பெருமானும் காட்சி அளிக்கும் அற்புத தளமாக இத்தளம் விளங்குகிறது.


ஆலய சுவர்களில் திருவாசகம் கல்வெட்டுக்களாக பொறிக்கப்பட்ட சிறப்புமிக்க தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.



நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !