செம்மணியில் 11 என்புக்கூடுகள் இன்று அடையாளம்: 7 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து 11 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 7 மனித என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில், செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 405 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 377 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version