செம்மணி மனிதப் புதைகுழி 544 எலும்புக்கூடுகள் அடையாளம் 530 முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று(12) இடம்பெற்றது.

இதன்போது 05 மனித எலும்புக்கூடு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 544 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Exit mobile version