திருத்தங்களின் பின்னரான முதலாவது இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை உத்தியோகபூர்வமாக நேற்று(07) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவால்,



பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு முதலாவது இந்திய குடியுரிமை அட்டை வழங்கிவைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனால் அறிவிக்கப்பட்ட இந்திய குடியுரிமை ( OCI )நடைமுறை எளிமைப்படுத்தலின் கீழ்,
இலங்கையில் வாழும் 5 மற்றும் 6ஆம் தலைமுறை இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் OCI அட்டைக்கான தகுதி விரிவுபடுத்தப்பட்டது.
இந்த புதிய தகுதி மாற்றத்தின் கீழ் இலங்கையில் வழங்கப்படும் முதலாவது இந்திய குடியுரிமை அட்டையாக இது அமைந்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !