சாவகச்சேரி நகராட்சி மன்றமும், யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்திய “தென்னிந்திய கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை” நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்றிரவு (27) சிறப்பாக இடம்பெற்றது.



இந்த நிகழ்வுக்கு யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் தென்னிந்திய கலைஞர்களின் மோகினியாட்டம் மற்றும் கதகளி ஆகிய ஆற்றுகைகள் இடம்பெற்றன.




கலைமாமணி ரஷ்மி மேனன் தலைமையில் மோகினி ஆட்டமும், கலாஸ்ரீ ஏவூர் ராஜேந்திரபிள்ளை தலைமையில் கதகளியும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து இந்திய கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!