நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கும், பேரழிவிற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தொடங்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதிக்கு பொலிஸ் திணைக்களம் 50 மில்லியன் ரூபா பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று(06) இந்த நிதியைக் கையளித்தனர்.
பொலிஸ் பணியில் இருக்கும் உத்தியோகத்தர்கள் தங்கள் சம்பளத்திலிருந்து நன்கொடையாக வழங்கிய பணம் இந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
செம்மணி மனித புதை குழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!