நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை , நெடுந்தாரகை ஆகியவற்றின் சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 13 முதல் இந்த படகு சேவை நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என நெடுந்தீவு பிரதேச செயலாளர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.
நெடுந்தீவில் இருந்து பி.ப. 3.00 மணிக்கு புறப்படும் படகு மீண்டும் குறிகாட்டுவானிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும்.
ஞாயிற்றுகிழமைகளில் நெடுந்தீவில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் படகு மீண்டும் குறிகாட்டுவானில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும்.
குமுதினி படகு சேவையில் எந்த மாற்றங்களும் இல்லை என பிரதேச செயலர் குறிப்பிட்டார்.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்று அழைப்பாணை!
சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியோடு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் அணி வெற்றி!
இலங்கையில் முதலீடு செய்ய தமிழக முதலீட்டாளர்கள் முன்வருகை!