நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் வீட்டு விருந்தில் மது அருந்திய நிலையில், மது போதையில் கொடூரமான *பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருந்தார்.
இந்தச் சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றிருந்தாலும் அதைபற்றிப் பேசவேண்டிய தேவை எழுந்துள்ளது.
விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை அனைவரையும் மனஞ்சுழிக்கச் செய்துள்ளது.
அவரது அந்தரங்க உறுப்பில் இரண்டு கண்ணாடி போத்தல்கள் செலுத்தப்பட்டிருந்தன.
அதிக இரத்தப்போக்கு மற்றும் கொடூர வலியால் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கருப்பைப் பையில் இருந்து மருத்துவக் குழு சத்திரசிகிச்சை மூலம் அந்த இரண்டு கண்ணாடி போத்தல்களையும் வெற்றிகரமாக அகற்றியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் தொடர்புடைய நிறுவன உரிமையாளர் உட்பட நபர்கள் இருவரும், உதவியாக இருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு பெண்ணுக்கு நடக்கக்கூடிய மிக மோசமான கொடுமை. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !